Guru Vedham

Guru Vedham

Tuesday, October 18, 2016

ரக்ஷகன் !

 க்ருஷ்ணனின் தபால் 📬
யார் வேண்டுமானாலும் உன் முதுகில் குத்தட்டும் !
நீ கலங்காதே !

வியாதிகள் உன்னை படுத்தினாலும் பயப்படாதே !
சூழ்ச்சிகள் உன்னைச் சூழ்ந்தாலும் துக்கப்படாதே !
எல்லாம் க்ருஷ்ணனுக்குத் தெரியும் என்று தைரியமாய் எதிர் கொள் !
காலம் மாறும் !
காட்சிகள் மாறும் !
நிலைமை மாறும் !

கண்ணனல்லவா உன் ரக்ஷகன் !
குருஜீ கோபாலவல்லிதாசர்

காப்பாற்று!


Thursday, October 13, 2016

ஜாக்கிரதை!


📬 க்ருஷ்ணனின் தபால் 
📬
கண்ணன் உன்னை களவு செய்ய காத்திருக்கிறான் !
ராச பௌர்ணமி அன்று உன்னைக் களவு செய்யப்போகிறான் !
ஜாக்கிரதையாக இரு !

குருஜீ கோபாலவல்லிதாசர்

Wednesday, October 12, 2016

க்ருஷ்ணனுக்காக...

 க்ருஷ்ணனின் தபால் 📬
இந்த உலகத்தில் நீ,
மரணம் வரை
சாப்பிடவேண்டும், தூங்கவேண்டும், மல மூத்திரங்களை வெளியே தள்ளவேண்டும், மூச்சுவிடவேண்டும்...

இவை எல்லாவற்றையும் க்ருஷ்ணனுக்காக செய்து வா...
இதுவே உனக்கு க்ருஷ்ணனைக் காட்டிக்கொடுக்கும் !!!!
குருஜீ கோபாலவல்லிதாசர்


Monday, October 10, 2016

உன் எண்ணங்கள்...

க்ருஷ்ணனின் தபால்📬
உன் மனதின் எண்ணங்கள் எல்லாம் மிகப் பலமானவை !
உன் ஒவ்வொரு எண்ணமுமே உன் வாழ்வில் ஒரு தாக்கத்தை ஒவ்வொரு கால கட்டத்தில் உண்டாக்குகிறது !
உன் எண்ணங்களை கவனி !
உன் எண்ணங்களை புரிந்து கொள் !
உன் எண்ணங்களை மாற்றிக்கொள் !

இன்று முதல் க்ருஷ்ணனின் பலத்தோடும் அருளோடும் உன் எண்ணங்கள் நல் வழியில் செல்லும் !
*குருஜீ கோபாலவல்லிதாசர்*

Sunday, October 9, 2016

பொதுவானது !

க்ருஷ்ணனின் தபால் 📬
இந்த உலகம் எல்லோருக்கும் பொதுவானது !
இந்த உலகில் யாருக்கும் கஷ்டம் கொடுக்காமல் வாழ எல்லோருக்கும் உரிமை உண்டு !
நீ வாழ்வது தண்டம் என்று சொல்ல யாருக்கும் அதிகாரம் இல்லை !
அடுத்தவரை சொல்லவும் உனக்கு அதிகாரமில்லை !
நீ கண்ணனுக்காக வாழ்ந்து கொண்டிரு !
குருஜீ கோபாலவல்லிதாசர்

Tuesday, October 4, 2016

கரை சேர்ப்பேன்!


குறை சொல்லாதே !

க்ருஷ்ணனின் தபால் 
📬
ஒவ்வொருவரும் வாழ்வை ஒவ்வொரு விதமாய் பார்க்கின்றனர் !
அதில் தவறேதுமில்லை !
நீ வாழ்வை பார்க்கும் முறைதான் சரி என்று நினைப்பது தான் தவறு !
க்ருஷ்ணன் ஒவ்வொருவரையும் பல விதமாக பக்குவப்படுத்தி, வாழ்வின் ரஹஸ்யத்தை புரியவைக்கிறான் !
நீ வாழும் முறையை மட்டும் பார் ! அடுத்தவரை குறை சொல்லாதே !

குருஜீ கோபாலவல்லிதாசர்

அர்த்தம் உண்டு!

க்ருஷ்ணனின் தபால் 
📬
குறிஞ்சி மலர் பூப்பது 12 வருடங்களுக்கு ஒரு முறையே !
அதனால் அதற்கு மரியாதையே ஒழிய அவமானம் இல்லை !
அது 12 வருடங்கள் வாழ்வதால் தானே பூக்கிறது !!!

சில சந்தர்ப்பங்களில் வாழ்வில் ஏதும் நடக்கவில்லை, கிடைக்கவில்லை என்றாலும் வாழ்வது தர்மம் என்று வாழ் !!
ஒரு நாள் உன் வாழ்விற்கும் அர்த்தம் உண்டு, பலனுண்டு என்று நீ உணர்வாய் !
கண்ணன் உன்னை ஆசையோடு படைத்திருக்கிறான் !
கண்ணன் உன்னை காரணத்தோடு வாழ வைக்கிறான் !


குருஜீ கோபாலவல்லிதாசர்

Sunday, October 2, 2016

க்ருஷ்ணனின் அந்தப்புரம் !

க்ருஷ்ணனின் தபால் 📬
உன் ஆனந்தத்திற்கு எல்லையே கிடையாது !
மனதை எப்போதும் லேசாக வைத்திரு!
மனம் சுமை தாங்கி அல்ல !
மனம் க்ருஷ்ணனின் அந்தப்புரம் !
அங்கே அவனைத் தவிர யாரையும் விடாதே !
சரியா ?!?
குருஜீ கோபாலவல்லிதாசர்