Guru Vedham

Guru Vedham

Wednesday, August 31, 2016

க்ருஷ்ணனை நினை!

க்ருஷ்ணனின் தபால் 

க்ருஷ்ணனின் அழகை நினை ! உன் அருவருப்பான எண்ணங்கள் மாறும் !
க்ருஷ்ணனின் கருணையை நினை ! உன் தற்பெருமை அழியும் !
க்ருஷ்ணனின் பக்தர்களை நினை ! உனக்கு நல்ல பக்தி உண்டாகும் !

குருஜீ கோபாலவல்லிதாசர்

Tuesday, August 30, 2016

நிறைய அனுபவி !

க்ருஷ்ணனின் தபால் 

பகவானை அனுபவிப்பதே பக்தி !
யார் எப்படி பகவானை அனுபவித்தாலும் அவன் ஏற்றுக்கொள்கிறான்!

நீ மற்றவரின் அனுபவத்தை குறைவாக ஒருபோதும் நினைக்காதே !
உயிர் பிரியும் முன் எத்தனை விதத்தில் முடியுமோ, உன் க்ருஷ்ணனை நிறைய அனுபவி ! அதைத் தவிர வேறு எதையும் கவனிக்காதே !


குருஜீ கோபாலவல்லிதாசர்

Monday, August 29, 2016

குறை சொல்லாதே !

க்ருஷ்ணனின் தபால் 

யாரையும் எதற்காகவும் குற்றம் குறை சொல்லாதே !
உன் கர்மவினையே ஒவ்வொருவரும் உன்னிடம் ஒவ்வொரு விதமாக நடந்துகொள்கிறார்கள் !
நாம ஜபம் செய் ! கர்ம வினை மாறும் ! வாழ்க்கையும், மற்றவர் உன்னிடம் நடக்கும் முறையும் நிச்சயமாக மாறும் !

குருஜீ கோபாலவல்லிதாசர்

Sunday, August 28, 2016

பிரியமான ஜீவன்...

க்ருஷ்ணனின் தபால் 

உன்னை நீயே மட்டம் தட்டிக்கொண்டால், வேறு யார் தான் சும்மா இருப்பார்கள் !!!
நீ பகவான் க்ருஷ்ணனுக்கு பிரியமான ஒரு ஜீவன்
கண்ணன் ஒரு நாளும் உன்னை மட்டமாய் நினைத்ததில்லை
க்ருஷ்ணனின் அன்பை நினைத்து இவ்வுலகில் வாழ்

குருஜீ கோபாலவல்லிதாசர்

Saturday, August 27, 2016

தங்கப்பாத்திரம்...

 க்ருஷ்ணனின் தபால் 

அவமானங்களை நீ மனதில் பத்திரமாய் வைப்பதால், அது உன்னை திரும்பத் திரும்ப கேவலப்படுத்துகிறது...
உன் மனம் அழகான தங்கப்பாத்திரம்...அதில் க்ருஷ்ணனை வை...அப்போது உன் அவமானங்களை அவன் அழிப்பான்...
புரிந்ததா?!?

குருஜீ கோபாலவல்லிதாசர்

போகலாமா?!?