Guru Vedham

Guru Vedham

Thursday, July 21, 2016

எல்லாம் நன்மைக்கே!


கூப்பிடு உடனே !

 க்ருஷ்ணனின் தபால் 
நீ ஒவ்வொரு முறையும் பகவானின் திருநாமத்தை, யாரோ ஒருவரின் பெயராக கூப்பிட்டாலும், நிச்சயம் அது பகவான் காதில் விழும் ! வைகுந்தத்தில் அது எதிரொலிக்கும் !
அஜாமிளன் தன் பிள்ளையை நினைத்து "நாராயணா" என்று கத்தியது உடனேயே வைகுந்தத்தில் அது எதிரொலித்ததே !
கூப்பிடு உடனே !
உன் க்ருஷ்ணன் காதில் விழும் !

குருஜீ கோபாலவல்லிதாசர்

Monday, July 18, 2016

க்ருஷ்ணனின் கருணை...

க்ருஷ்ணனின் தபால்

வாழ்க்கையை நடத்துவது க்ருஷ்ணனின் கருணை...
உன் வாழ்வின் ஆனந்தத்தை யாரும் கொள்ளையடிக்க முடியாது !
உன் வாழ்க்கை சரியான சுகமான வழியிலேயே செல்கிறது !
விடாமல் நாம ஜபம் செய் !
வெற்றியும் தோல்வியும் உன் வாழ்வை பாதிப்பதில்லை !
தோல்வி நிலையில்லை !
சில தோல்விகளும் உன் வாழ்வில் வெற்றியே !

குருஜீ கோபாலவல்லிதாசர்

உன் நன்மைக்கே!


நானிருக்கிறேன்!


Tuesday, July 12, 2016

நாமம் ஜபி !

🙏க்ருஷ்ணனின் தபால்🙏

ஒரு கொசுவால் பல தடைகளைத் தாண்டி வாழ முடியுமென்றால், உன்னால் வாழமுடியாதோ !!!
துளித்துளியாய் தேனைச் சேகரித்து ஒரு பெரிய தேன்கூட்டை தேனியால் உண்டாக்க முடியுமானால், உன்னால் உனக்கான விஷயங்களை சம்பாதிக்கமுடியாதோ ?!?
க்ருஷ்ணன் உனக்கு பெரிய சக்தி...
நாமம் ஜபி ! வாழ்வை வெல் !

குருஜீ கோபாலவல்லிதாசர்

Monday, July 11, 2016

ஜாக்கிரதை !!!!

🙏க்ருஷ்ணனின் தபால்🙏
ஏதோ கொஞ்சம் பக்தி செய்வதனால், நீ மற்றவரை விட உயர்ந்த நிலையில் இருப்பதாக நினைத்துவிடாதே...
பணிவோடு இருப்பதே பக்தி...
மற்றவரை மதிப்பதே பக்தி...
பகவான் உயர்ந்தவன் என்ற நினைவோடு மட்டும் வாழ்...

உன்னுடைய தற்பெருமையும், அகம்பாவமும் உன்னை பகவானை விட்டு வெகுதூரம் அழைத்துச் சென்றுவிடும் !!!
ஜாக்கிரதை !!!!
குருஜீ கோபாலவல்லிதாசர்

Sunday, July 10, 2016

வலிமையானது...

க்ருஷ்ணனின் தபால்

உனது மனது வலிமையானது... எதையும் தாங்கி, எல்லாவற்றையும் தாண்டி ஜெயிக்க உன்னால் முடியும்...
நீயேதான் உன்னை பலவீனமாக நினைக்கிறாய் ! உன் மனதால் நீ கண்ணனையே கட்டிப்போட முடியும் ! மற்ற விஷயங்களை சரி செய்ய முடியாதா என்ன ?!?

*குருஜீ கோபாலவல்லிதாசர்*

வலிமையானது...

க்ருஷ்ணனின் தபால்

உனது மனது வலிமையானது... எதையும் தாங்கி, எல்லாவற்றையும் தாண்டி ஜெயிக்க உன்னால் முடியும்...
நீயேதான் உன்னை பலவீனமாக நினைக்கிறாய் ! உன் மனதால் நீ கண்ணனையே கட்டிப்போட முடியும் ! மற்ற விஷயங்களை சரி செய்ய முடியாதா என்ன ?!?

*குருஜீ கோபாலவல்லிதாசர்*

Saturday, July 9, 2016

பரமானந்தம்...

க்ருஷ்ணனின் தபால்

ராதேக்ருஷ்ணா...
உலகில் குறையைக் காண ஆரம்பித்தால், ஒவ்வொரு நிமிடமும் நரகத்தை விட கொடுமையே... வாழ்வே அர்த்தமற்றதாகும்....
உலகில் தெய்வீகத்தைக் காண முயன்றால், எல்லாமே தெய்வதரிசனமே...
ஒவ்வொரு நிமிடமும் பரமானந்தமே….


குருஜீ கோபாலவல்லிதாசர்