க்ருஷ்ணனின் தபால்
ராதேக்ருஷ்ணா…
இனி புதிதாய் வாழ்...
புதியதாய் தமிழ் வருஷம் பிறக்கிறது...
புதியதாய் வாழ்க்கை தொடங்குகிறது...
புதியதாய் சிந்தனை ஆரம்பமாகிறது...
புதியதாய் பக்தி உதயமாகிறது...
புதியதாய் பலம் உண்டாகிறது...
புதியதாய் உற்சாகம்
எழுகிறது...
புதியதாய் க்ருஷ்ண அனுபவங்கள் கிடைக்கிறது...
புதியதாய் வாழ்வின் அர்த்தம் புரிகிறது...
புதியதாய் ஆரோக்கியம் கிளர்ந்து எழுகிறது...
புதியதாய் ஞான வைராக்கியங்கள் துளிர்க்கிறது...
புதியதாய் பகவானின் நாம ஜபம் தொடங்கு...
இனி எல்லாம் புதிதே....
இனி என்றும் புதிதே…
குருஜீ கோபாலவல்லிதாசர்
No comments:
Post a Comment