ராதேக்ருஷ்ணா…
குலத்தைப் பார்த்து க்ருஷ்ணன் அருள் செய்வதில்லை...
ப்ரஹ்லாதன் அசுர குலம்...
விபீஷணன் ராக்ஷஸ குலம்...
குகன் வேடுவ ஜாதி...
நாரதர் வேலைக்காரியின் பிள்ளை...
கோபிகைகள் மாடு மேய்க்கும் குலம்...
நம்பாடுவான் ஹரிஜன குலம்...
நீ இந்த பக்தர்களின் குலத்தில் உன்னை சமர்ப்பித்து விடு...
கட்டாயம் கண்ணன் உன்னைத் தேடி வருவான்...
இனி நீ பக்த குலம்…