ராதேக்ருஷ்ணா…
காமத்திற்காக பல நாள் தூங்காமலிருந்தாய்...
துக்கத்தில் பல நாள் தூக்கம் தொலைத்திருந்தாய்...
கோபத்தில் எத்தனையோ நாட்கள் தூக்கத்தைக் கொன்றாய்...
குழப்பத்தில், பயத்தில் எத்தனை நாள் தூங்காமலிருந்தாய்...
இன்று கைசிக ஏகாதசி...
நம்பாடுவான் முழிந்திருந்து திருக்குறுங்குடி சுந்தர பரிபூரண நம்பியின் அனுக்ரஹம் பெற்றார்...
நம்பியோடு கொஞ்சம் ஆனந்தமாய் பேசிக்கொண்டிரேன்...
இன்று குருவாயூர் ஏகாதசி...
குருவாயூர் யானை கேசவன் முக்தி அடைந்த நாள்... தூங்காமல் குருவாயூரப்பனோடு கொஞ்சி விளையாடேன்...
இன்று கொஞ்ச நேரம் தூங்காமல் இருந்தால் நல்லது நடக்குமே...
நன்மை உண்டாகுமே...
உன்னால் முடியும்...
உன் க்ருஷ்ணனோடு இன்று இரவுப்பொழுதைக் கழி…
No comments:
Post a Comment