Guru Vedham

Guru Vedham

Sunday, October 25, 2015

பக்குவப்படுவாய்….


ராதேக்ருஷ்ணா

யார் எந்த விஷயத்தை எப்படிச் சொன்னாலும், நீ எல்லா விஷயங்களையும் நன்மையாகவேப் பார்....
உலகில் நன்மை இல்லாத சம்பவங்கள் நடப்பதில்லை...
உலகில் நன்மை இல்லாத ஒரு விஷயமும் இல்லை...
பாம்பின் விஷமும் மருந்தாகிறது...
முள்ளுச் செடியும் வேலியாகிறது...
உதிர்ந்த இலைகளும், அழுகிய காய்களும், பழங்களும் மண் உரமாகின்றன...
நன்மையைப் பார்க்க நீ ஆரம்பித்தால், உலகில் எங்கும் க்ருஷ்ண க்ருபையை நீ அனுபவிக்க முடியும்....
விடாமல் நாம ஜபம் செய்...
பக்குவப்படுவாய்….

No comments:

Post a Comment