ராதேக்ருஷ்ணா…
எல்லாவற்றிலும் க்ருஷ்ணன் ரகசியமாய், பூரணமாய் நிறைந்திருக்கிறான்...
மலரின் வாசமாக...
பழத்தின் சுவையாக...
விதையின் சக்தியாக...
மேகத்தில் மழையாக...
சூரியனின் வெப்பமாக...
நிலவின் குளிர்ச்சியாக...
உன்னுள் பசியாக...
பசிக்கு உணவாக...
உணவை ஜீரணிக்கும் சக்தியாக...
எங்கும் காற்றாக...
கேட்கும் ஒலியாக...
ஆணின் ஆண்மையாக...
பெண்ணின் பெண்மையாக...
குழந்தையின் தெய்வீகமாக...
இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்...
நீ அதை உணர்வாய்...
க்ருஷ்ணா என்று ஜபி...
உன்னால் உணர முடியும்…
No comments:
Post a Comment