ராதேக்ருஷ்ணா…
ஜோரா சொல்லு...ராதே ராதே...
அழகா சொல்லு...ராதே ராதே...
நாளைக்கு நம்ம ராதிகாரணியோட பிறந்தநாள்...
க்ருஷ்ண ஜெயந்தி எப்படிக் கொண்டாடினாயோ அதே போல் ஜோரா நாம ஜபத்தோடு கொண்டாடு...
நாளைக்கு உன் வீட்டிற்கு ராதாராணி வரப்போறாள்...
காத்திரு...
உனக்கு க்ருஷ்ணனைத் தர அவள் ஆசையோடிருக்கிறாள்...
ஹே ராதே...
நாங்கள் பக்திக்கு ஆசைப்படும் குழந்தைகள்.... உன் ப்ரேமையால் எங்களை க்ருஷ்ண பக்தியில் திளைக்க அருள் செய்…
No comments:
Post a Comment