ராதேக்ருஷ்ணா....
நீ சில சமயங்களில் தெரியாமல் தவறு செய்திருப்பாய்....
பல சந்தர்ப்பங்களில் தெரிந்தே தவறு செய்திருப்பாய்....
அதை நினைத்து இப்போது குற்ற உணர்ச்சியில் நொந்துபொகாதே....
எல்லாவற்றையும் கண்ணனிடம் சொல்லிவிடு....
உன்னுடைய பாபங்களையும், குற்ற உணர்ச்சிகளையும், துக்கத்தையும் கண்ணனிடம் சமர்ப்பணம் செய்துவிடு....
அவன்தான் கீதையில் "என்னிடம் சரணடை..நான் உன்னை அனைத்துப் பாவங்களிலிருந்து விடுவிக்கிறேன்... வருந்தாதே" என்று சொல்லியிருக்கிறான்....
இனி அவன் பார்த்துப்பான்…
No comments:
Post a Comment