ராதேக்ருஷ்ணா….
மனதில் உறுதி வேண்டும்...
பிரச்சனைகளில் தளராத, மனதில் உறுதி வேண்டும்...
வியாதிகளில் கலங்காத, மனதில் உறுதி வேண்டும்...
நம்பிக்கை துரோகங்களில் வீழாத, மனதில் உறுதி வேண்டும்...
தோல்விகளில் துவளாத, மனதில் உறுதி வேண்டும்...
எதிர்பாராத தருணங்களில், மனதில் உறுதி வேண்டும்....
எல்லாமே இழந்த நிலையிலும், மனதில் உறுதி வேண்டும்....
எல்லோருமே ஒதுக்கி வைத்த சமயத்திலும், மனதில் உறுதி வேண்டும்...
கண்ணன் என்னும் கருந்தெய்வம் உன்னுள் என்றும் உறுதியாக இருக்க, உன் மனதில் உறுதிக்கு
ஒரு குறைவுண்டோ ....
மனதில் உறுதியோடு வாழ்...
உயிர் போகும் போதும், மனதின் உறுதி நிற்க….
No comments:
Post a Comment