ராதேக்ருஷ்ணா….
உனக்காக கண்ணன் யோசிக்கிறான்....
உன் எதிர்காலத்தை அழகாக திட்டமிடுகிறான்...
உன் தேவைகளை தகுந்த சமயத்தில் தர உனக்காக, கண்ணன் சேமித்து வைக்கிறான்....
உன் மனதின் காயங்களுக்கு, உனக்குத் தெரியாமல் மருந்திட்டு சமாதானம் தருகிறான்....
உன்னுள்ளிருந்து உனக்கு ஒவ்வொன்றையும் உனக்குப் புரியும்படி சொல்லித்தருகிறான்....
உன்னைத் தங்கத் தாம்பாளத்தில் வைத்து தாங்குகிறான்....
கொஞ்சம் நீ கண்ணனைத் தடுக்காமல் இருந்தால் போதும்….
No comments:
Post a Comment