ராதேக்ருஷ்ணா….
உன் நாவை நீ அடக்காவிட்டால், மற்றவரின் நாக்கு உன்னை அடக்கும்....
உன் பொறாமையை நீ கொல்லாவிட்டால், அது உன் வாழ்வை கொல்லும்...
உன் தற்பெருமையை நீ வளர்த்தால், அது உனது உண்மையான மரியாதையை கெடுக்கும்....
உன் ஆசைக்கு நீ அடிபணிந்தால், அது உன்னை அடுத்தவருக்கு அடிமையாக்கிவிடும்...
உன் அஹம்பாவத்தை நீ வெல்லாவிட்டால், அது உன்னை மற்றவரிடம் தோற்கவைக்கும்...
பகவான் க்ருஷ்ணனின் திருவடியைப் பிடித்தால், நீ யாரிடமும் எதையும் யாசிக்கவே வேண்டாம்...
பகவானின் நாமத்தை நீ விடாமல் ஜபித்தால், நீ யமன் தலையிலும் கால் வைக்கலாம்….
No comments:
Post a Comment