ராதேக்ருஷ்ணா...
உன் சந்தோஷத்தில் கண்ணன் சிரிக்கிறான்...
உன் துக்கத்தில் கண்ணன் அழுகிறான்....
உன் நிதானத்தில் கண்ணன்
நெகிழ்கிறான்....
உன் உற்சாகத்தில் கண்ணன் குதூகலிக்கிறான்....
உன் முயற்சியில் கண்ணன் சிலிர்க்கிறான்....
உன் வெற்றியில் கண்ணன் திளைக்கிறான்....
உன் தோல்வியில் கண்ணன் உதவுகிறான்....
உன் அவமானத்தில் கண்ணன் தாங்குகிறான்....
உன் பலவீனத்தில் கண்ணன் அரவணைக்கிறான்....
மொத்தத்தில் கண்ணன் உனக்காக வாழ்கிறான்...
உன்னோடு வாழ்கிறான்….
No comments:
Post a Comment