Guru Vedham
Wednesday, April 29, 2015
Tuesday, April 28, 2015
உன் நன்மைக்காகவே
ராதேக்ருஷ்ணா...
நீ நினைப்பது போல் எல்லாமே நடந்துவிட்டால், வாழ்வில் நீ முன்னேறுவது குறைந்துவிடும்...
உன் சிந்திக்கும் திறன் மழுங்கி விடும்...
உன் தன்னம்பிக்கை பலவீனமாகும்...
உன்னை பலசாலியாக்க, புத்திசாலியாக்க, திறமையுள்ளவராக்க, கண்ணனே உன் ஆசையெல்லாம் நடக்காமல் பார்த்துக்கொள்கிறான்....
கண்ணன் உன் நன்மைக்காகவே யோசிக்கிறான்…
மன்மதன் வருகிறான்...
ராதேக்ருஷ்ணா...
மன்மதன் வருகிறான்...
ஆமாம். சாக்ஷாத் மன்மத மன்மதனான க்ருஷ்ணன் வருகிறான்...
வருஷமாக வருகிறான்...
வர்ஷிக்க வருகிறான்...
ப்ரேமையில் உன்னை நனைக்க வருகிறான்...
உண்மையில் உன்னை காதலிக்கவருகிறான்...
காதலி உன் கண்ணனை காதலி....
அனுபவி உன் கண்ணனோடு வாழ்வை அனுபவி...
மன்மத வருஷ ஆசிர்வாதங்கள்...
மன்மத மன்மதனான கண்ணனின் அனுபவங்கள் தடையில்லாமல் கிடைக்க ஆசீர்வாதங்கள்..
உன்னோடு வாழ்கிறான்….
ராதேக்ருஷ்ணா...
உன் சந்தோஷத்தில் கண்ணன் சிரிக்கிறான்...
உன் துக்கத்தில் கண்ணன் அழுகிறான்....
உன் நிதானத்தில் கண்ணன்
நெகிழ்கிறான்....
உன் உற்சாகத்தில் கண்ணன் குதூகலிக்கிறான்....
உன் முயற்சியில் கண்ணன் சிலிர்க்கிறான்....
உன் வெற்றியில் கண்ணன் திளைக்கிறான்....
உன் தோல்வியில் கண்ணன் உதவுகிறான்....
உன் அவமானத்தில் கண்ணன் தாங்குகிறான்....
உன் பலவீனத்தில் கண்ணன் அரவணைக்கிறான்....
மொத்தத்தில் கண்ணன் உனக்காக வாழ்கிறான்...
உன்னோடு வாழ்கிறான்….
Subscribe to:
Posts (Atom)