Guru Vedham
Monday, March 30, 2015
Sunday, March 22, 2015
நிதானம் பிரதானம்….
ராதேக்ருஷ்ணா …
எதையும் அவசரமாய் தீர்மானிக்காதே....
நிதானம் பிரதானம்…. மனிதர்கள் அபிமானிகள்...
எல்லோரின் செயலையும் கவனி.... ஆனால் அது எதுவும் உன் மனதை பாதிக்காமல் பார்த்துக்கொள்... எல்லோரும் பைத்தியமே... ஆத்திரத்தில் அவசரத்தில் பயத்தில் ஆர்வக்கோளாரில் எதையாவது செய்து பின் புலம்புவார்கள்.... நீ க்ருஷ்ணனின் குழந்தையாய் அவன் அரவணைப்பில் எல்லாவற்றையும் வேடிக்கை பார்….
கொடுத்துவிட்டோம்…
ஜெய் நரசிம்மா….
நம் மனதை அச்சுறுத்தும் அசுரர்களை ஜ்வாலா நரசிம்மன் கிழிக்கட்டும்...
நம் ஹ்ருதய குகையில் அஹோபில நரசிம்மன் செஞ்சு லக்ஷ்மியோடு குடிகொள்ளட்டும்...
நம் மனதில் மாலோலன் ஆசார்யனோடு நிரந்தரமாய் சஞ்சாரம் செய்யட்டும்...
நம் இந்திரியங்களை விஷய சுகங்களிலிருந்து க்ரோட (வராஹ) நரசிம்மன் மீட்கட்டும்...
நம் நேரத்தை ஆஞ்சநேயனுக்கு அனுக்ரஹித்த காரஞ்ச நரசிம்மன் எடுத்துக்கொள்ளட்டும்...
நம் குணங்களை பரசுராமனுக்காய் வந்த பார்கவ நரசிம்மன் பார்த்துக்கொள்ளட்டும்...
நம் யோகத்தையும், ஆனந்தத்தையும் யோகானந்த நரசிம்மன் தீர்மானித்துக்கொள்ளட்டும்...
நம் நாமஜபத்தையும், ப்ரார்த்தனையையும் சத்ர வட நரசிம்மன் கேட்டுக்கொள்ளட்டும்...
நம்மை பாவத்தை அழித்து, பவித்திர பக்த ப்ரஹ்லாதனாக மாற்றும் காரியத்தை பாவன நரசிம்மன் செய்துகொள்ளட்டும்....
Saturday, March 21, 2015
Subscribe to:
Posts (Atom)