Guru Vedham

Guru Vedham

Thursday, January 1, 2015

2015ல்....

ராதேக்ருஷ்ணா …

2015ல்....

1. ஆதிசங்கரர் போல வைராக்கியம் பெறு... 
2. ஸ்வாமி இராமானுஜர் போல சரணாகதி செய்...
3. மத்வாசார்யர் போல பக்தி பெறுவாய்...
4. க்ருஷ்ண சைதன்யர் போல நாமஜபம் ஜபிப்பாய்...
5. மஹாப்ரபு வல்லபாச்சாரியார் போல க்ருஷ்ணனைக் கொஞ்சுவாய்...
6. சந்த் துகாராம் போல குழந்தை மனதை அடைவாய்...
7. மீராமாதா போல நிதானமாய் இரு...
8. ஜெயதேவர் போல ப்ரேமையில் மூழ்கு....
9. பூந்தானம் போல பாகவதம் வாசி...
10. அன்னமாச்சாரியார் போல அன்புடன் பழகு...
11. ஸ்வாமி விவேகானந்தர் போல விவேகம் கொள்...
12. கோவிந்த தாசர் போல பகவானோடு விளையாடு...
13. சக்குபாய் போல விட்டலனைக் கட்டிப்போடு...
14. ஹசீனா ஹமீதா போல யமுனையாற்றங்கரையில் காதல் செய்...
15. துருவதாசன் போல ப்ருந்தாவனத்திற்கு ஓடிவிடு...
16. வடுகநம்பி போல குரு இட்ட வழக்காய் இரு...
17. கல்யாண பிரம்மச்சாரி போல க்ருஷ்ண விக்கிரஹத்தை பூரணமாய் நம்பு...
18. ரமண மஹரிஷியைப் போல "இனி உன்னிஷ்டம் என்னிஷ்டம்" என்று தெய்வத்திடம் கூறிவிடு...
19. புரந்தரதாசர் போல பகவானையே பாடிக்கொண்டிரு....
20. பீவி நாச்சியாரைப் போல சம்பத்குமாரனை மணந்துவிடு...
..................
தினமும் 15 முறை ராதேக்ருஷ்ணா என்று எழுது......


No comments:

Post a Comment