Guru Vedham

Guru Vedham

Thursday, November 6, 2014

ஜெயித்து வருவாய்…



ராதேக்ருஷ்ணா 

வாழ்க்கையில் பிரச்சினை கஷ்டம் எல்லாம் ஏன் வருகிறது தெரியுமா ?
உனக்குத் தன்னம்பிக்கை அதிகமாவதற்காகத் தான். நல்லா கவனித்துப் பார். ஒவ்வொரு பிரச்சனையிலும், ஒவ்வொரு கஷ்டத்திலும் உனக்கு இன்னும் பலம் கூடியிருக்கிறது. உன் மனதுக்கு விசேஷமான சக்தி கிடைத்திருக்கிறது. பகவான் க்ருஷ்ணன் உன்னை வளர்த்துக்கொண்டு வருகிறான். கஷ்டமும் பிரச்சனையும் உனக்கு விசேஷமான பலம் கொடுக்கும் மருந்துகள். அதனால் நன்றாக அவைகளை ஏற்றுக்கொள். க்ருஷ்ணன் உன் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையும், தன்னம்பிக்கையும் இருக்கும்வரை நிச்சயமாக நீ எல்லாவற்றையும் ஜெயித்து வருவாய்

No comments:

Post a Comment