Guru Vedham

Guru Vedham

Thursday, October 16, 2014

எல்லாம் இனிமையே...

ராதேக்ருஷ்ணா…

உலகில் எல்லாம் இனிமையே...

துன்பமும் இனிமையே...நம்மைப் பக்குவப்படுத்துவதால்....
பிரச்சினைகளும் இனிமையே... நம்மை யோசிக்கவைப்பதினால்...
வியாதிகளும் இனிமையே...
நமக்கு ஆரோக்கியத்தின் மகிமையை உணர்த்துவதால்...

அவமரியாதைகளும் இனிமையே....நமக்கு வைராக்கியத்தைத் தருவதால்....
தோல்விகளும் இனிமையே... நமக்கு வெற்றியின் ரஹஸ்யங்களைச் சொல்வதால்...
குழப்பங்களும் இனிமையே...நம்மை க்ருஷ்ணனிடம் அழைத்துச்செல்வதால்....
துரோகமும் இனிமையே....நமக்கு யதார்த்தத்தை புரியவைப்பதால்...
மரணமும் இனிமையே...நமக்கு நிலையில்லாமையை காட்டுவதால்...
பயமும் இனிமையே....நமக்குத் தைரியத்தை ஊட்டுவதால்…

No comments:

Post a Comment