Guru Vedham

Guru Vedham

Wednesday, October 1, 2014

நல்லதைப் பார்….


ராதேக்ருஷ்ணா 

துன்பத்தில் நீ துவண்டு போனால், உன் இன்பத்தில் யார் திளைப்பர் ?
பிரச்சனைகளில் நீ நம்பிக்கையை இழந்தால், அதன் தீர்வை யார் அனுபவிப்பது ?
அவமானத்தில் நீ வாழ்வை வெறுத்தால், உனக்கு வரும் பெருமையை யார் கொண்டாடுவர் ?
நம்பிக்கை துரோகத்தில் நீ நொறுங்கி விட்டால், க்ருஷ்ணனின் க்ருபையை 
யார் உணர்ந்துகொள்வார் ?
துன்பம் இன்பத்தைத் சொல்லும் தூதுவன்...
பிரச்சினை தீர்வை அழைத்துவரும் தோழன்...
அவமானம் உனக்குப் பெருமையைக் கொண்டு வரும் உன் நலம் விரும்பி...
நம்பிக்கைத் துரோகிகள் உனக்குக் க்ருஷ்ணனைக் காட்டும் வழிகாட்டி...
எல்லா கெடுதல்களிலும் ஒளிந்திருக்கும் நல்லதைப் பார்….

No comments:

Post a Comment