ராதேக்ருஷ்ணா ….
மனம் ஒரு விசித்திரமான பொருள்...
யாருடைய மனமும் உள்ளபடி பவித்திரமாக இல்லை...ஆனால் அந்த மனதிற்குள் பகவானும் இருக்கிறான்...
உன் மனதை சுத்தப்படுத்தும் வேலையை பகவான் க்ருஷ்ணனிடம் ஒப்படைத்துவிட்டு, நீ விடாமல் நாமஜபம் செய்துகொண்டிரு...பகவான் உன் மனதைச் சுத்தப்படுத்தி, அதற்குள்ளேயே இருந்துகொண்டு உனக்கு வேண்டிய அனுக்ரஹம் எல்லாம் செய்வார்....
மனது பகவானின் சொத்து...அவரிடம் கொடுத்துவிடு...சத்தியமாய் சீக்கிரத்திலேயே உன் மனதிற்குள் பகவான் க்ருஷ்ணனின் தரிசனம் கிடைக்கும்…