Guru Vedham

Guru Vedham

Sunday, September 28, 2014

நம்பிக்கையோடு வாழ்…


ராதேக்ருஷ்ணா 

உலகில் ஒவ்வொரு நாளும் பல கோடி நல்ல விஷயங்கள் நடந்துகொண்டுதான் இருக்கிறது. சில கெட்ட விஷயங்கள், சில கெட்ட மனிதர்களின் செய்கையைக் கொண்டு உலகைத் தவறாக நினைக்காதே.
இதே உலகில் பலர் தினமும் க்ருஷ்ணனை ப்ரத்யக்ஷமாக அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதே உலகில் பலர் ஜெயித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதே உலகில் தினமும் பலர் புதுமைகள் செய்கிறார்கள்.
இதே உலகில் பலர் தினமும் பலருக்கு உதவி செய்கிறார்கள்.
இந்த நிமிஷம் உலகில் பல ஆயிரம் கோடி நல்லவைகள் நடக்கின்றன.
அதனால் உலகில் வாழப் பயப்படாதே....
உன் வாழ்விலும் நிச்சயம் நல்லவை நடந்தது....
நடக்கின்றது....
நடக்கப்போகின்றது...
சந்தோஷமாக,தைரியமாக, நம்பிக்கையோடு வாழ்…

No comments:

Post a Comment