Guru Vedham

Guru Vedham

Wednesday, May 14, 2014

நரசிம்மா...


ராதேக்ருஷ்ணா

நரசிம்மா...

ப்ரோதஷ நேரத்தில் அவதரித்தவனே...
ப்ரஹ்லாதனின் நெஞ்சில்
நிறைந்தவனே...

கம்பத்திலிருந்து பிறந்தவனே...
கர்ஜிக்கும் நரசிங்கனே...

அஹோபில மைந்தனே...
அற்புத நகம் கொண்ட அன்பனே ...

என்னை உன்னிடம் தந்தேன்...

என் அஹம்பாவத்தைக் கிழித்துப் போடு...
என் காமத்தைக் கிழித்துப் போடு...
என் கோபத்தைக் கிழித்துப் போடு...
என் ஆசையைக் கிழித்துப் போடு...
என் பாசத்தைக் கிழித்துப் போடு...
என் பொய்யை கிழித்துப் போடு...
என் பயத்தைக் கிழித்துப் போடு...

எனக்குள் இருக்கும் எல்லா இரண்யகசிபுவையும் கிழித்து,
உன் ப்ரஹ்லாதனாக என்னை மாற்றி,
உன் பிறந்தநாள் பரிசாக என்னை ஏற்றுக்கொள்...

அடியேன் ராமானுஜ தாசன்…

ராதேக்ருஷ்ணா

No comments:

Post a Comment